Wednesday, 18 February 2026


                                                    I respect my parents' legacy

 We, as a family, received condolence messages after my mother passed away. Prayers for her peace and words of kindness were truly comforting and will never be forgotten.

On behalf of our entire family, I would like to thank everyone who reached out, sent messages, and offered their love and support during this crucial time in our lives.

Now that the rituals are over and the house is quieter, the reality is settling in. There is a void. A kind of silence that only comes when someone irreplaceable/unforgettable is no longer there.

My mother was not just my mother. She became everything. Mother. Protector. Provider. Grandparent. The steady backbone of our family.

Relatives and neighbours loved both my father and mother very much. If you ask me about the best years of my life, I would say when my mother and father both lived with us. Our family members grew up struggling financially and emotionally. My father and mother built everything from scratch. They saved every rupee. Not to enjoy. Not to display. But to secure our future.

Did they sacrifice their own comfort? Yes. Their priorities were always us. My mother was always seen working - either in the kitchen or in my sister’s room.  I can never be that kind of parent or grandparent.

My father was hospitalised for one month. He was treated at Best Hospital for 15 days. 15 days at J.V.Hospital. He was hospitalised and bedridden for one month only. It was a struggle for life. He was undergoing treatment for cancer at home for the past four years. But he suffered only for one month. We were not able to serve him much. Still, he is in our memory.

But the last decade of my mother's life was very vulnerable, and the entire family became an unshakable pillar for her. From her first fall in 2015, and from 2019 onwards, the entire family was completely dedicated to taking care of her. Since we had served her for a long time, we could not easily forget the absence of my mother.

I did not tarnish the name they earned. It is the honour I pay to my parents. My dear father, mother, now it is my/our turn to choose to live in a way that makes you both proud.

S.Kasturi Rangan

 

Saturday, 7 February 2026

என் தாயார் திருமதி. வேதம் ஸ்ரீனிவாசனுக்கு அஞ்சலி.

 


   என் தாயார் திருமதி. வேதம் ஸ்ரீனிவாசனுக்கு அஞ்சலி.


"அத்தியா" என்று அன்பாக பேரக்குழந்தைகளால், அழைக்கப்படும் என் தாயார் திருமதி வேதம், 5 ஜனவரி 2026, திங்கட்கிழமை, மாலை 5.21 மணிக்கு (மார்கழி 21-திரிதியைதிதி, கிருஷ்ணபக்ஷம்) ஆச்சார்யன் திருவடியை அடைந்தார். ஆச்சார்யன் திருவடியில் திருமதி வேதத்தின் உன்னத ஆன்மா அமைதியை அடையட்டும்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

திருமதி வேதம் 1932 நவம்பர் 17 ஆம் தேதி  திருமதி ரங்கநாயகி மற்றும் ஸ்ரீ சந்தான கோபால ஐயங்கார், தம்பதி களுக்கு சென்னையில் பிறந்தார்

1948 ஜனவரி 18 ஆம் தேதி புனிதமான திருமலையில், அஹோபில மடத்தில் திரு .ஸ்ரீநிவாசனுடன் திருமணம் செய்து கொண்டார். ஆறு தசாப்த கால திருமண வாழ்க்கை வாழ்ந்தார்.

இருப்பினும், வாழ்க்கை முழுவதும் என் அம்மாவிற்கு தொடர்ச்சியான உணர்ச்சி சோதனைகள். குழந்தைப் பருவத்திலிருந்தே, அவரது மகள் செல்வி விஜயலட்சுமி நோய்வாய்ப்பட்டு, ஏப்ரல் 28, 2004 அன்று இறக்கும் வரை வாழ்நாள் முழுவதும் கவனிப்பு தேவைப்பட்டது. பல தசாப்தங்களாக, திருமதி வேதம் "கடவுள் மிகவும் கனமான பொறுப்புகளால் வலிமையான இதயங்களை சோதிக்கிறார்" என்ற சொல்லப்படாத உண்மையில் வாழ்ந்து வந்தார்.

இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 29, 2008 அன்று தனது கணவர் ஸ்ரீ ஸ்ரீனிவாசனின் இழப்பு அவளை ஆழ்ந்த தனிமையில் ஆழ்த்தியது.

அதைத் தொடர்ந்து உடல் ரீதியான துன்பங்கள் - 2015 மற்றும் 2019 இல் தொடை எலும்பு முறிவுகள், அதன் பிறகு அவர் கிட்டத்தட்ட உடல் முழுமையாக அசையாமல் விட்டுவிட்டன. தாயின் இறுதி ஆண்டுகளில், நினைவாற்றல் இழப்பு மற்றும் உடல் மேலும் மங்கச் செய்தது.

இருந்தபோதிலும், ஜூன் 24, 2024 அன்று தனது மூன்றாவது மகன் ஸ்ரீ எஸ் வாசுவின் இதயத்தை உடைக்கும் இழப்பையும் என் அம்மா தாங்கிக் கொண்டார்.

இந்த இழப்பை நாங்கள் என் அம்மாவிடம் சொல்லவில்லை. நாங்கள் என் அம்மாவிடம் இதை சொன்னாலும் கூட, இதை புரிந்து கொள்ள சாத்தியமில்லை. இந்த விஷயத்தைப் பற்றி எங்களுக்கு இடையே விவாதிக்கும்போது அவர் உள் மனம் புரிந்து கொள்வதை எங்களால் பார்க்க முடிந்தது. அவர் உள் மனதில் சில நேரங்களில் சில குழப்பங்களைக் காண முடிந்தது.

சோதனையின் ஒவ்வொரு கட்டத்திலும், "ஒரு தாயின் மன உறுதி பெரும்பாலும் மௌனத்தைப் பற்றி சத்தமாகப் பேசுகிறது" என்பதை உறுதிப்படுத்தி, தயக்கத்துடன் உறுதியானாள். நிம்மதி அல்ல, ஆனால் அசாதாரண சகிப்புத்தன்மை, அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் அமைதி.

துக்கத்தால் சூழப்பட்டிருந்தாலும், திருமதி வேதத்தின் வாழ்க்கை அர்த்தத்தில் நிறைந்தது. அவர் நம்பிக்கையுடன் ஒவ்வொரு சோதனையையும், கண்ணியம் மற்றும் கருணையுடன் ஒவ்வொரு இழப்பையும் எதிர்கொண்டார். அவர் மீண்டும் மீண்டும் ஏற்பட்ட வாழ்க்கை புயல்களில் பாறையைப் போல எதிர்த்து நின்றார், தெய்வீகத்தின் கால்களில் தன் வலியை சரணடைந்து, தன் குடும்பத்திற்கு தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தார்.

தாயின் மரபு வாழ்கிறது - வெறும் நினைவுகளில் மட்டுமல்ல, அவர் பரப்பிய மதிப்புகளிலும்.

பல வருடங்களாக உடல் அசைவின்மை மற்றும் அறிவாற்றல் சரிவு மூலம் தாயைப் பராமரித்தல், இங்கே மகன்கள் தாயின் வாழ்க்கை நங்கூரம் என்றும், ஒரு தாய் தனது மகனின் மனசாட்சியைக் கடந்து செல்லும் அமைதியான துணையாக இருக்கிறார் என்றும் உறுதிப்படுத்தப்பட்டது.

பல வருடங்களாக அர்ப்பணிப்புடன் சேவை செய்து, என்னுடைய சொந்த உடல் வரம்புகளை மீறி, அவரை நிலைநிறுத்தி, குடும்ப மனநிலையை நிலை நிறுத்தி, தர்மத்தின் உயர்ந்த வடிவத்தை நிறைவேற்றியதிலிருந்து மட்டுமே வரும் அமைதி, இறையச்சம் பெரும் அமைதியை அளித்தது.

நீண்ட காலம் படுத்த படுக்கையான என் அம்மாவை படுக்கையில் வலி மற்றும் படுக்கைப் புண் இல்லாமல் வசதியாக வைத்திருப்பது பராமரிப்பாளர்களின் பொறுப்பு. மேலும் பராமரிப்பாளர்களின் மற்றொரு முக்கியமான அம்சம் நோயாளிக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் உணவளிப்பது. இந்த இரண்டு விஷயங்களையும் என் குடும்ப உறுப்பினர்கள் குறிப்பாக  என்  மனைவி ஸ்ரீமதி.. ராதாவும் மற்றும் என் மகன் ஸ்ரீ வெங்கடேஷ்சும் கவனித்துக்கொண்டார்கள். இன்றைய வாழ்க்கையில் எந்த மருமகளும் ,பேரனும் இப்படி செய்ய மாட்டார்கள். அவர்களின் சேவைக்கு நான் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். என் அம்மாவும் அவர்களை நிச்சயமாக ஆசீர்வதிப்பார்கள்.

என் அம்மா அமைதியாக இருக்கும் போதெல்லாம் என் மனைவி அவர் முன் ஏதாவது ஸ்லோகத்தைச் சொல்வதை என் அம்மா உன்னிப்பாக பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும், அதே போல் என் அம்மாவும் மீதமுள்ள ஸ்லோக பகுதியைத் தொடர்ந்து சொல்வார். நான் பலமுறை பார்த்திருக்கிறேன். இந்த மாதிரியான திசை திருப்பல் அந்த நேரத்தில் என் அம்மாவிற்கு தேவைப் பட்டது. என் மனைவிக்கு நன்றி கூறுகிறேன்

உண்மையில் ஒரு மகனாக நான் என் தாய்க்கு என் கடமையைச் செய்தேன். என் அம்மாவின் கடைசி மூச்சு வரை கவனித்துக்கொள்வது என் பொறுப்பு என்று நான் உணர்ந்தேன்.

என் அம்மாவுக்கு என் சம்பந்தி ஸ்ரீ.கே.ஆர்.பி.சாரதி அவர்கள் எழுதிய அஞ்சலியைப் படித்த பிறகுதான், என் அம்மாவுக்கு நான் செய்த சேவையில் அவ்வளவு மகத்துவம் இருக்கிறது என்பதை நான் அறிந்துகொண்டேன். என் அம்மாவுக்கு அவர் எழுதிய அஞ்சலியை நான் பலமுறை படித்தேன். அவர் அஞ்சலியில் எனக்கு மிகவும் பிடித்த குறிப்பிட்ட வாக்கியங்கள். சில சொற்றொடர்கள் அதில் ஆழமான அர்த்தத்தைக் கொண்டுள்ளன. அவைகள் என் இதயத்தைத் தொட்டது.

என் அம்மாவுக்கு நான் செய்யும் உண்மையான சேவைகளை அவர் உன்னிப்பாகக் கவனித்ததால் தான் அப்படி  எழுத முடியும் என்று நான் நினைக்கிறேன். இருப்பினும், என் அம்மாவுக்கு என் கடமையை என்னால் முடிந்தவரை செய்துள்ளேன். என் மறைந்த அம்மாவுக்கு, மறைந்த சகோதரிக்கு மற்றும் மறைந்த தந்தைக்கு சேவை செய்ய வாய்ப்பை வழங்கிய கடவுளுக்கு நன்றி.

என் அம்மா என்னோட இல்லையென்றாலும் அம்மாவின் ஆசிகள் என்னை வழிநடத்துறத இன்னும் உணர முடியறது. நீங்க எப்பவும் என் மனசுல இருக்கீங்க அம்மா .

திருமதி வேதத்தின் உன்னத ஆன்மா அமைதியை அடையட்டும்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

 

==================================

 

 


Sunday, 25 January 2026

Extract from the Sri.K.R.P.SARATHY’s Tribute to my mother Smt. VEDAM SRINIVASAN


                               Extract from the Sri.K.R.P.SARATHY’s 

                                            Tribute to my mother                                

                                   Smt. VEDAM SRINIVASAN

                       A LIFE LIVED IN SURRENDER AND SERVICE





Some lives are shaped not by comfort, but by courage. Smt. Vedam’s life was one such—marked by repeated trials and quiet triumphs, where faith became her refuge and patience her constant companion. As it is often said, “A mother’s strength is not measured by the absence of hardship, but by her ability to stand firm through every storm.”

Smt. Vedam, fondly called “ Athiya” attained Acharyan Thiruvadi on Monday,5th January 2026, at 5.21 pm, on the sacred day of Margazhi 21–Thrithiyai Thithi, Krishna paksham. She lived a long life of 93 years, marked not by ease, but by extraordinary endurance, unwavering faith and quiet dignity. Born on 17th November 1932 in chennai to Smt. Ranganayaki and Sri Santhana Gopala Iyengar, Smt.Vedam was the youngest among four siblings, in a traditional house hold grounded in enduring values. Her marriage to Sri N.Srinivasan on18th January 1948 at the sacred precincts of Sri Ahobila Mutt, Tirumala, ushered in a six-decade long married life marked by shared values, devotion and mutual respect.

Blessed with three sons—Sri S. Kasturi Rangan, Sri S. Raman and Sri S. Vasu—and two daughters—Selvi Vijayalakshmi and Smt.Vasumathi Muralidharan, her life revolved entirely around her family. Like many mothers, she gave without counting the cost, embodying the truth that  a mother’s heart is the first school patience and sacrifice.

Life, however, placed before her a succession of emotional trials. From infancy, her daughter Selvi Vijayalakshmi was afflicted by a rare illness, requiring lifelong care until her passing on 28th April 2004. For decades, Smt. Vedam lived the unspoken truth that “God tests the strongest hearts with the heaviest responsibilities ” She bore it all with motherly devotion and quiet surrender.

This was soon followed by the loss of her husband Sri.N.Srinivasan on 29th April 2008 plunging her into deep loneliness. Physical afflictions followed—thigh fractures in 2015 and 2019, leaving her almost completely immobile thereafter. In her final years, memory loss further dimmed her physical world, though her spiritual core remained steadfast and unshaken. As if fate demanded yet more, she endured the heart breaking loss of her third son Sri S Vasu on 24th June 2024.Yet through every phase of trial, she stood firm, affirming that “A mother’s resilience often speaks loudest in silence.”

Deeply God-fearing, Smt.Vedam Srinivasan drew strength from unwavering devotion. Lighting lamps before the Navagraha Perumals was her daily ritual. In her prime, she under took a 48-day mandalam vow at Sholingur, circumambulating Sri Lakshmi Narasimhar and Sri Anjaneyar 108 times each day, accompanied by her daughter Vijayalakshmi—an act that reflected not merely devotion but remarkable physical and mental discipline. Her life echoed the belief that “When a mother kneels in prayer, generations stand protected.”

In the final decade of her life, when Smt.Vedam Srinivasan was most vulnerable, her eldest son, Sri S. Kasturi  Rangan, became her unwavering pillar. From her first fall in 2015—and completely from 2019 onwards—he dedicated himself entirely to her care.

Smt. Vedam’s life, though strewn with sorrow, was rich in meaning. She faced every trial with faith, every loss with dignity and every responsibility with grace. She stood like a rock through repeated storms, surrendering her pain at the feet of the Divine and dedicating herself wholly to her family. Her legacy lives on—not merely in memories, but in the values she transmitted.

May Smt. Vedam’s noble soul attain eternal peace at Acharyan Thiruvadi!

Om Shanti!  Om Shanti!!  Om Shanti!!!-

 


Tuesday, 26 August 2025

                            The Choolaimedu Exnora's SILVER JUBILEE YEAR CELEBRATION

  
The Choolaimedu Exnora's
  Inaugural address on 22/7/2000                     , Silver Jubilee address on 20/7/2025
 





Saturday, 22 March 2025

கல்வி + ஒழுக்கம் = SUCCESS



 வணக்கம்

அன்பும்,பண்பும், பாசமும், நிறைந்த என் அன்பு  நண்பர்களே, எப்பொழுதும் தொய்வின்றி உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் என்றென்றும் இல்லத்தில் இன்பமும் ,உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கிடவும், எல்லாம் வல்ல இறைவனின் திருவருளுடன் என் அன்பான வாழ்த்துக்கள்.

என் வாழ்க்கையில் என் அனுபவத்தில் சந்தித்த, சில தெரிந்த  கொண்ட விஷயங்களைச் சொல்ல வாய்ப்பு அளித்ததற்கு முதலில் இப்ராஹிம் சாஹிப் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

"இந்த 75 வயதிலும், நான் தொடர்ந்து சமூகத்தின் பொது நலன்  நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன், அது எனக்கு மனநிறைவைத் தருகிறது, இன்னும் நிறைய சமுதாய நற்காரியங்கள் செய்ய உள்ளன, ஆனால் அதற்கு எனது உடல்நிலை ஒத்துழைக்க வேண்டும்.

நான்படித்ததில்,அதில் ரசித்ததை  எனது மனதில் தோன்றியதை,  உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

எனது பள்ளி நாட்களில், வாரத்திற்கு ஒரு  நாள் அறநெறி அறிவியல் moral science period இருந்தது .பெரும்பாலும் அது ஒழுக்கமான வாழ்க்கையை மையப்படுத்தியது. இப்போதெல்லாம் அது இல்லை

அனைவருக்கும் கல்வி மிகவும் முக்கியமானது என்றாலும், கல்வியை விட சுய ஒழுக்கம் மிகவும் முக்கியமானது , ஏனெனில் இது அறிவை திறம்பட பயன்படுத்தவும், சவால்களை சமாளிக்கவும் மற்றும் இலக்குகளை அடையவும் மன உறுதியை வழங்குகிறது, வெளிப்புற உந்துதல் இல்லாவிட்டாலும் கூட; அடிப்படையில், சுய ஒழுக்கம் தனிநபர்கள் தங்கள் கல்வியை மேம்படுத்தும்.

 சுய ஒழுக்கம் பெரும்பாலும் வெற்றியை அடைவதில் மிக முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது, ஏனெனில் இது உங்கள் செயல்களை கட்டுப்படுத்தவும், உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்தவும், உந்துதல் குறைவாக இருந்தாலும் சவால்களை சமாளிக்கவும் அனுமதிக்கிறது,

இது தனிப்பட்ட அல்லது தொழில்முறை வாழ்க்கையின் எந்தவொரு துறையிலும் நிலையான முன்னேற்றத்திற்கு முக்கியமானது.

வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் முழுமையாகப் பயன்படுத்த அதிகாரம் அளிக்கிறது.

மிதமான புத்திசாலித்தனத்துடன் கூடிய ஒழுக்கமானவர்கள் பெரிய காரியங்களைச் சாதிக்க முடியும். இருப்பினும், குறைந்த ஒழுக்கம் கொண்ட அதிக புத்திசாலிகள் உலகில் நாம் மதிக்கும் பல விஷயங்களைச் சாதித்திருக்கிறார்கள். இந்த மக்கள் சாதிக்கும் விஷயங்களின் தன்மை பொதுவாக முற்றிலும் வேறுபட்டு இருக்கும்  என்று நான் நம்புகிறேன்.

இருப்பினும், கல்வி மற்றும் சுய ஒழுக்கம் ஆகியவை ஒன்றுக்கொன்று பிரத்தியேகமானவை அல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியம்; அவை ஒன்றையொன்று பூர்த்தி செய்கின்றன. கல்வி அறிவு  திறன்களை வழங்குகிறது, அதே நேரத்தில் சுய ஒழுக்கம் உங்கள் முழு திறனை அடைய அவற்றை தீவிரமாக பயன்படுத்த உதவுகிறது.நிச்சயமாக, இரண்டையும் நன்றாக சமநிலைப்படுத்துவதே சிறந்தது.

முதலில் 25-50% வரம்பில் முடிவுகளை எதிர்பார்ப்பது நியாயமானது.  உங்கள் சமூகத்தை வளரச் செய்வது உங்களுடையது. இவை அனைத்தும் எனது அறிவுரை அல்ல, இது எனது அனுபவம்.

தொடக்க கல்வி காலத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட தண்டனையிலிருந்து நான் தோப்புக்காரணம் போடுவதில்  அனுபவம் பெற்றிருக்கிறேன், மேலும் அளவுகோலின் செங்குத்தான, தட்டையான நிலையிலும் அடி எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும். இந்த தண்டனை என் அறிவை மேம்படுத்தாமல், ஒழுக்கமான சிறுவனாக மட்டுமே வடிவமைக்கப்பட்டது.ஒரு காலத்தில் ரோமானியக் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படும் பாடங்கள் 

அவர்களின் சமூகப் பொருளாதார நிலையைப் பொறுத்ததுபெரும்பான்மையான ரோமானியர்கள் வீட்டிலோபயிற்சியின் மூலமாகவோ அல்லது ஆரம்பப் பள்ளியிலோ அடிப்படை மட்டத்தில் எப்படி படிக்கவும் எழுதவும் கற்றுக்கொடுக்கப்பட்டனர்இருப்பினும்பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் மட்டுமே தங்கள் கல்வி வாழ்க்கையைத் தொடர்வார்கள்.

the level and quality of education provided to Roman children ரோமானியக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வியின் நிலை மற்றும் தரம் குடும்பத்திற்கு குடும்பம் கடுமையாக மாறுபடுகிறதுஆயினும்கூட,Roman popular morality came eventually to expect fathers to have their children educated to some extent, ரோமானிய பிரபலமான ஒழுக்கம் இறுதியில் தந்தைகள் தங்கள் குழந்தைகளை ஓரளவிற்கு கல்வி கற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறதுமேலும் அரசியலில் நுழைய விரும்பும் எந்த ரோமானியருக்கும் முழுமையான மேம்பட்ட கல்வி எதிர்பார்க்கப்படுகிறது

 கிரேக்க நாகரீகம் பழமையானது. கிரேக்க கல்வி emphasised intellectual development அறிவுசார் வளர்ச்சியை வலியுறுத்தியதுரோமானியர்கள் focused on practical skills, shaping modern vocational training நடைமுறை திறன்களில் கவனம் செலுத்தினர்நவீன தொழில் பயிற்சியை வடிவமைக்கின்றனர்.

 காலப்போக்கில், traditional classroom-based knowledge transmission பாரம்பரிய வகுப்பறை அடிப்படையிலான அறிவு பரிமாற்றம் ஆதிக்கம் செலுத்தியதுபெரும்பாலும் நிஜ-உலகப் பயன்பாடுகளிலிருந்து பிரிக்கப்பட்டது.

1960களில்மருத்துவக் கல்வியில், to bridge theoretical knowledge and practical application கோட்பாட்டு அறிவு மற்றும் நடைமுறைப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்ததிட்ட அடிப்படையிலான கற்றல் வெளிப்பட்டது.தங்கள் பாடங்களைப் பற்றிய ஆழமான புரிதலை வளர்த்துக் கொள்கிறார்கள்.

 எனது கொள்கை வெற்றியோ தோல்வியோ எனது கடமையை நான் செய்வேன். யார் பாராட்டினாலும் பாராட்டவில்லையானாலும் நான் கவலைப்படுவதில்லை. திறமையும் நேர்மையும் வெளிப்படும் போது மக்கள் பாராட்டுவார்கள்.

முயற்சி என்னுடையதுஆனால் தீர்ப்பு கடவுளுடையது.

நான் ஆசைப்படும் போதுநான் விரும்பியது கிடைக்க வில்லைகிடைக்கும் போது ஆசை இல்லை.

கடைசி பெஞ்ச் மாணவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் தோல்விகளை சந்திப்பதில்லைமுதல் பெஞ்ச் மாணவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் வெற்றியை சந்திக்கவில்லை.

வெற்றியை விட தோல்விகள் சக்தி வாய்ந்தவை.

வெற்றிகள் கொண்டாட்டங்களுக்கு மட்டுமேஆனால் தோல்விகள் நேர்மறையான சிந்தனையை உருவாக்குவது மற்றும் அவர்களின் வாழ்க்கைக்கு ஆதரவாக இருக்கும்.

எனது அன்பான வேண்டுகோள், தயவுசெய்து வருங்கால  தலைமுறைக்கு தார்மீக பண்புகளையும் ,மதிப்புகளையும் கற்க வழிசெய்யுங்கள்.

 





Monday, 7 October 2024


                                    

             

என் தந்தையின் பிறந்த நூற்றாண்டு ஆண்டு அக்டோபர் 13, 2024  தொடக்கத்தைக் குறித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறோம்.                                                                                                                                                                                                                                    6th Oct.2024

அன்புள்ள அனைவருக்கும்,

அனைவரையும் நீண்ட ஆயுளுடனும் பூரண ஆரோக்கியத்துடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

“நான் இதுவரை (8-1-2021) பயணித்த பாதை” என்ற தலைப்பில் என்னுடைய 72 ஆம் ஆண்டு தொடக்கத்தில் என்னைப் பற்றிய ஒரு விளக்கக்காட்சியையும் சில பழைய நிகழ்வுகளை நினைவுபடுத்தி  (PDF பதிப்பாக ) எழுதப்பட்டது.

PDF பதிப்பு புத்தகத்தின் தொடர்ச்சியாக என்னுடைய 74 ஆம் ஆண்டின் (08/1/2023) தொடக்கத்தில் மீண்டும்  என் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கிறேன்.1..!  முதல் முறையாக புதிய பார்வையில் சில பழைய நிகழ்வுகளை நினைவுபடுத்தி எழுதப்பட்டது. 

23/5/2024 மீண்டும் இரண்டாவது முறை என் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கிறேன்.2..!எனது மனதில் தோன்றியதை இரண்டாவது முறையாக புதிய பார்வையில் எழுதப்பட்டது .

எனவே வாழ்க்கையை அடிக்கடி திரும்பிப் பார்க்கும்போது, எனது முந்தைய PDF வடிவ புத்தகத்தின் நீட்டிப்பை தொடர்ச்சியாக இரண்டு முறை புதிய பார்வையில் எழுதப்பட்டது.

மேலும் தற்போது அதன் தொடர்ச்சியாக  புதிய பார்வையில் எனது திருத்தகப்பனாரின், மறைந்த மோகனூர் மாடபூசி ஸ்ரீ. என். சீனிவாசனின் ,100வது திருநக்ஷத்திரம் (புரட்டாசி அவிட்டம்)  அக்டோபர் 13, 2024 நூற்றாண்டு தொடக்க விழாவில் அவருக்கு அஞ்சலி செலுத்துவது குறித்து உங்கள் பார்வைக்கு.

பொது வெளியில் எங்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அதிகம் எழுதவில்லை. ஆனால் எங்களது தந்தையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இதை எழுத வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

-------------------------------------------------------------------------------------------------

2024 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி, மறைந்த மோகனூர் மாடபூசி ஸ்ரீ என்.ஸ்ரீனிவாசனின் 100வது திருநக்ஷத்திரம் (புரட்டாசி அவிட்டம்) ஆகாயால் அன்று முதலில் எங்கள் வீட்டில் உள்ள சாளக்கிராமத்திற்கு திருவாராதனை செய்கிறோம்.அதன் பிறகு திருத்தகப்பனாரின் திருவுருவப் படத்திற்கு குடும்ப உறுப்பினர்களாகிய நாங்கள் என் தந்தையின் பிறந்த நூற்றாண்டு ஆண்டு தொடக்கத்தைக் குறித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறோம். இந்த நாள் எங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் இந்த மைல்கல்லைக் கொண்டாடும் நேரம்.

ஸ்ரீ என். சீனிவாசன் 83 ஆண்டுகள் வாழ்ந்த குறிப்பிடத்தக்க வாழ்க்கையைக் கொண்டாட, எங்கள் குடும்பம் ஒன்று கூடி, பெருமிதத்துடனும் நன்றியுடனும் பிரார்த்தனை செய்கிறோம்,

நாட்கள் மாதங்களாகவும், மாதங்கள் வருடங்களாகவும் மாறியது ஆனால்  தந்தையின்  பெயரைச் சொன்னால் எங்கள் இதயம் நிரம்பி வழிகிறது .

என் தந்தையின் வாழ்க்கையில் நடந்த பல வாழ்க்கை அனுபவங்கள் என் வாழ்க்கை நிகழ்வுகளாக இருப்பதால் என்னைப் பெற்ற தந்தையை நினைத்து கனத்த இதயத்துடனும் கலங்கிய விழிகளுடனும் இதை எழுதுகிறேன்.

ஸ்ரீ M.V. நரசிம்ம ஐயங்கார் மற்றும் ஸ்ரீமதி. நாமகிரி அம்மாள் அவர்களுக்கு திருவண்ணாமலையில் என் தந்தை செப்டம்பர் 29, 1925 இல் பிறந்தார் (அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 15, 1925 என பதிவு செய்யப்பட்டது), என் தாத்தா அப்போது திருவண்ணாமலையில் மாஜிஸ்திரேட்டாகப் பணியில் இருந்தார். தந்தையின் திருநக்ஷத்திரம் புரட்டாசி அவிட்டம். அவரது வாழ்க்கைப் பயணம் அவரது வலுவான மதிப்புகள் மற்றும் கொள்கைகளுக்கு ஒரு சான்றாகும்., மேலும் அவர் ஸ்ரீ அஹோபில மடத்தை பக்தியுடன் பின்பற்றியவர்.

எனது தந்தை சிறுவயது முதலே சென்னையில் மட்டுமே வாழ்க்கையை கழித்தார் . ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் பாய்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்து, லயோலா கல்லூரியில் பட்டம் பெற்றார். அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது பணியைத் தொடங்கினார், பின்னர் ஓய்வு பெறும் வரை சென்னையில் உள்ள ஏஜி அலுவலகத்தில் பணியாற்றினார்.

எனது பெற்றோர் திரு.N.ஸ்ரீனிவாசன் மற்றும் திருமதி வேதம் திருமணம் 18/1/1948 ஞாயிற்றுக்கிழமை 12 Noon  முதல் 1P.M. வரை ஸ்ரீ அஹோபிலா மடம், திருமலை-திருப்பதியில் நிகழ்த்தப்பட்டது.

அவருக்கு ஆதரவாக துணைவியார் ஸ்ரீமதி. வேதம் மற்றும் ஐந்து குழந்தைகள்.

எனது தந்தையின் 60 வது பிறந்த நாள் வீட்டிலேயே கொண்டாடப்பட்டது மற்றும் 80 வது பிறந்த நாள் அருகிலுள்ள கல்யாண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.

29 ஏப்ரல் 2008 செவ்வாய்க் கிழமை இரவு 10.40 மணிக்கு எங்கள் தந்தையை நாங்கள் தவறவிட்டோம். இந்த நாள் நான் வாழ்க்கையில் தந்தையை தவறவிட்டதைப் பற்றி சிந்திக்க வைக்கிறது. அந்த ஆன்மாவுக்கு பணிவான அஞ்சலிகள்.

 அவர்களின் மகள்களில் ஒருவரான , மறைந்த ஸ்ரீமதி விஜயலட்சுமி மற்றும் சமீபத்தில் பிரிந்த அவர்களது மகன்களில் ஒருவரான ஸ்ரீ எஸ். வாசு இப்போது நம்மிடையே இல்லை, ஆனால் அவர்களின் நினைவுகள் வாழ்கின்றன.

மறைந்த என் அப்பா, சகோதரி மற்றும் சமீபத்தில் பிரிந்த சகோதரன் ஆகியோரின் ஆசிர்வாதம் எங்களுக்கு முக்கியம்.

எல்லாம் கடந்து போகும், எதுவும் நிரந்தரமில்லை என்பதை நான் புரிந்துக்கொண்டேன். காலம் எல்லா காயங்களையும் ஆற்றும்!

இப்போது 92 வயதான என் அம்மா நிறைவான வாழ்க்கையை நடத்துகிறார். அவர் மரபுவழி பெண்மணி.அவரது வாழ்க்கையில் அவர் நிறைய இன்னல்களையும்,சவால்களையும், எதிர்கொண்டு சமாளித்து வருகிறார் அவருக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர் ஆசிர்வாதமும் எங்களுக்கு முக்கியம்.

என் தந்தையை அவரது வாழ்நாளில் ஒரு முறையாவது கட்டிப்பிடிக்காததற்கு நான் வருந்துகிறேன்.

 நம்முடைய பெற்றோரை கவனித்துக்கொள்வது கடவுளை வணங்குவதற்கு சமம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாம் வாழும் இடம் வைகுண்டம் என்று எண்ணி மனமுவந்து பெருமாளை வழிபட்டால், அவர் தம் பக்தரை  நாம் வாழும் இடத்தில் வந்து தரிசனம் கொடுத்து அருள்புரிவார் என்பது எனது நம்பிக்கை.

எனது தந்தையின் வாழ்க்கை தொழில்முறை மற்றும் ஆன்மீகத்தின் சரியான கலவையாகும். யாரையும் புண்படுத்தாத மென்மையான குணம் கொண்டவர். அவரது அமைதியான மற்றும் மென்மையான இயல்பு அவரை ஒரு நல்ல மனிதனாக மாற்றியது, மேலும் அவர் எப்போதும் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் ஆகியவை நம் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வருவதற்குத் தேவையான கூறுகள் என்றும் அவர் வலியுறுத்தினார்.

என் தந்தை குடும்பத்திற்காக காளையைப் போல் உழைத்தார். அவரது பொறுப்புகள் மற்றும் கடமைகள்களை  கச்சிதமாக முடித்தார். .அவர் ஒருபோதும் பிரச்சினைகளைப் பற்றி வருத்தப்படவில்லை.

எங்கள் வாழ்க்கையை இன்னும் வசதியாக மாற்றவோ அல்லது எங்கள் பிரச்சனையை குறைப்பதற்கு பதிலாக , என் தந்தையின் முகத்தில் எல்லாவற்றையும் விட அவருக்கு பணம் முக்கியமில்லை என்ற சுயமரியாதையை நான் கண்டேன். அவர் வைகுண்டத்தில் மகிழ்ச்சியாக இருப்பார் என்பதில் உறுதியாக உள்ளோம்.

அவரது தினசரி வழிபாடு மற்றும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது மற்றும் ஆன்மீக பயிற்சியின் மீதான அவரது ஆழ்ந்த கடவுள் பக்தியை பிரதிபலித்தது, இது வாழ்க்கையின் சவால்களுக்கு மத்தியில் அவருக்கு உள் அமைதியைக் கொடுத்தது.

என் தந்தை  அடிக்கடி ராமாயணத்தின் சுந்தர காண்டத்தை பாராயணம் செய்வது மற்றும் குறிப்பாக தசரா பண்டிகையின் போது பாராயணம் செய்வது வழக்கம்.

எனவே நாங்கள் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் சாளக்கிராமத்திற்கு திருவாராதனை செய்த  பிறகு  ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்ய உள்ளோம். அந்த நாட்களில் என் தந்தை இந்த வகையான வழிபாடுகளை விரும்புவார்.

என் தந்தையின் அப்பா, அம்மா, தம்பி, அக்கா, தங்கை ஆகியவர்களின் நினைவுகள் என்றும் அழியாது; அவர்கள் எங்கள் இதயங்களிலும் எண்ணங்களிலும் உயிருடன் இருக்கிறார்கள், வாழ்க்கையின் பொக்கிஷங்களாக இருக்கிறார்கள்.

என் தந்தையின் எண்ணங்களும் தொலைநோக்கு பார்வையும் என்னை என்றென்றும் ஊக்குவிக்கின்றன.

என் தந்தை  ஒரு நேர்மையான மகன், ஒரு நல்ல கணவர், ஒரு ஒழுக்கமான அப்பா, அன்பான சகோதரன் மற்றும் அன்பான தாத்தா. இவை அனைத்தையும் தவிர அவர் மற்றவர்களுடன்  சொற்ப சொற்கள் பேச கூடிய மனிதராக இருந்தார்.

இந்த நாள் எப்போதும் என் நினைவில் பொறிக்கப்படும், மேலும் எனது தந்தை மற்றும் கடவுள் எங்களை ஆசீர்வதிப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எங்கள் வாழ்க்கையில் அவருடன் இணைந்திருப்பதற்கு நாங்கள் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

விதையிலிருந்து ஆலமரம் வளர்வது போல, குடும்பத்தில் என் தந்தை விதைத்த விதைகள் செழிக்கும் என்று நம்புகிறேன்.

இந்த அஞ்சலி என் தந்தையின் அன்புக்கும் வலிமைக்கும் நியாயம் செய்யும் என்று நம்புகிறேன். அவருடைய ஆசிர்வாதம் நம்மை வழிநடத்தட்டும்.  கடவுள் நம்மை மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் ஆசீர்வதிப்பாராக.

அவர் நமக்குக் கொடுத்த அன்புக்கும் பாடங்களுக்கும் சான்றாக நம் வாழ்க்கையை வாழ்வதே அவருக்குச் செய்யும் ஒரே அஞ்சலி. குடும்ப உறுப்பினர்களுடன் எனது தந்தைக்கு அஞ்சலி செலுத்துகிறேன். எங்கள் இதயங்களில்,என் தந்தை இப்போது இருக்கிறார் மற்றும் எப்போதும் இருப்பார் .

சிலர் சனிக்கிழமைகளை விரும்புகிறார்கள், சிலர் ஞாயிற்றுக்கிழமைகளை விரும்புகிறார்கள், ஆனால் நான் அமைதியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை கொண்ட நாளை விரும்புகிறேன்.

 எனது தந்தையின் நூற்றாண்டு விழாவை மேலும் மறக்க முடியாததாக மாற்ற இந்த சிறப்பு ஆண்டு முழுவதும் நீங்கள் அனைவரும்  எங்களுடன் பயணம் செய்வீர்கள்  என்று நம்புகிறேன்.

குடும்ப உறுப்பினர்கள் எனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நன்றி, மேலும் அற்புதமான குடும்பம் மற்றும் அற்புதமான நண்பர்களுடன் என்னை ஆசீர்வதித்ததற்காக நான் கடவுளுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மற்றவர்களுக்கு உதவ எனக்கு உதவிய, ஆரோக்கியமான மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கையை எனக்கு பரிசளித்த கடவுளுக்கு நன்றி,

எனக்காக நேரம் ஒதுக்கி என் குடும்பத்தில் கருணையை கொண்டு ஆசீர்வாதம் செய்கின்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் ஒருமுறை, என் உணர்ச்சிப் பெருக்குகளை பொறுமையுடன் படித்த உங்கள் அனைவருக்கும் நன்றி.

வாழும் காலம் வரை நன்றாக  வாழ்வோம். அதுவரை  எல்லோரையும் வாழ்க வாழ்கவென மனதார வாழ்த்துவோம் வாய்ப்பிருந்தால் சந்திப்போம் பேசுவோம்

வணக்கம்.

 அடியேன் மோகனூர் மாடபூசி  எஸ்.கஸ்தூரி ரங்கன்

 98406 06162


Tuesday, 28 May 2024

 


23/5/2024 மீண்டும் இரண்டாவது முறை என் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கிறேன் !

=================================================

“நான் இதுவரை (8-1-2021) பயணித்த பாதை” என்ற தலைப்பில் என்னுடைய 72 ஆம் ஆண்டு தொடக்கத்தில் என்னைப் பற்றிய ஒரு விளக்கக்காட்சியையும் சில பழைய நிகழ்வுகளை நினைவுபடுத்தியும் எழுதப்பட்டது. PDF பதிப்பு புத்தகத்தின் தொடர்ச்சியாக என்னுடைய 74 ஆம் ஆண்டின் (08/1/2023) தொடக்கத்தில் மீண்டும்  என் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கிறேன்...!

 வாழ்க்கையை அடிக்கடி திரும்பிப் பார்க்கும்போது, நாம் அனுபவித்த வேதனைகளும், அவற்றைக் கடந்து வந்த வழிகளும் நமக்கு நம்பிக்கையைத் தரும். எனது ஆர்வத்தின் காரணமாக நான் மீண்டும் சில சம்பவகளை    எனது முந்தைய PDF வடிவ புத்தகத்தின் நீட்டிப்பை தொடர்ச்சியாக புதிய பார்வையில் எழுதப்பட்டது.

 23/5/2024 மீண்டும் இரண்டாவது முறை என் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கிறேன்...!

எனது முந்தைய PDF வடிவ புத்தகத்தின் நீட்டிப்பை தொடர்ச்சியாக மலரும் நினைவுகளை அசைபோட ஒரு இனிமையான சரியான நேரம் . எனவே எனது மனதில் தோன்றியதை இரண்டாவது முறையாக புதிய பார்வையில் எழுதுகிறேன்..

----------------------------------------------------------------------------------------

 என் பழைய நினைவுகளை ஒவ்வொன்றாக நினைவு கூர்கிறேன். உங்களுக்கு நேரம் அனுமதித்தால் படிக்கவும்.

 நான் இளைஞனாக இருந்த போது, குடும்ப கஷ்டங்களுடன் சமூக மற்றும் கலாச்சார வாழ்விலும் எனக்கு நிறைய கனவுகள் இருந்தன.

நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படியாகத் திருத்தப்பட்டு, எளிமைப் படுத்தப் பட்டு, இந்த வயதில் காலை எழுந்தவுடன் முழங்கால் மற்றும் இடுப்பு வலி ல்லாமல் சுகமாக இருந்தாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையும் வ்வகையில் படிப்படியான சமரசங்களால் ஆனது.

ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் ஆண்கள் பள்ளி வடக்குக் கிளையில் பள்ளிப் படிப்பை சில நாட்கள் தொடங்கி, பின் சில மாதங்கள் மாடல் ஆரம்பநிலை பள்ளியிலும், பின்னர் ஜக்ரியா காலனியில் இருந்த சரஸ்வதி வித்யாலயாவில் 5ஆம் வகுப்பு வரையிலும். பிறகு ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (Main) 12ஆம் வகுப்பு வரை சராசரி மாணவனாக படித்தேன்.

 பெறும்பாலும் என் அப்பாவுடன் சேர்ந்து நான் காலை 9.20 மணிக்கு மின்சார ரயில் பிடித்து மாம்பலத்தில் இறங்கி ராமநாதன் தெருவில் உள்ள என் தாத்தா வீட்டிற்குச் சென்று அங்கிருந்து மதிய உணவுப் பெட்டியை எடுத்துக்கொண்டு காலை 9.45 மணியளவில் பள்ளிக்குச் செல்வேன்.

 பள்ளி செல்லும் வழியில் ராமநாதன் தெருவில் உள்ள பிள்ளையார் கோயிலில் இரண்டு பிரதட்சணம் செய்வேன். நான் படித்த அளவுக்கு தான் பிள்ளையார் அவரால் ஆசிர்வதிக்க முடிந்தது.

 நான் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய வகுப்பு (PUC) டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரியில் படிக்கும் போதே வங்கி சேவை அல்லது ஆடிட்டர் ஆக ஆசைப்பட்டேன். புது கல்லூரியில் எனது முதலாம் ஆண்டு வர்த்தகம் (B.Com) படிக்கும் போது நான் கணக்கியல் புத்தகம் (Batliboi ) வாங்கும் போது மேலும் நம்பிக்கை அதிகரித்தது. இதயமும் மூளையும் ஒன்றாக இணைந்தால் தான் லட்சியங்கள் நிறைவேறும். இணையவில்லை.

 எனது கல்லூரி நாட்களில் நான் சாந்தி ஆர்ட்ஸ் அகாடமியின் நிர்வாகத்தில் இணைந் திருந்தேன்.

 மேலும் சஞ்சய் காந்திக்கு நெருக்கமான என் நண்பன் குடந்தை ராமலிங்கத்துடன் (காங்கிரஸ்-ஓ) தேர்தலில் இணைந்து பணிபுரிந்தேன். அளவுக்கு அதிகமாக குடித்ததால் அவர் சில ஆண்டுகளில் உயிர் இழந்தார்.

 எனது முந்தைய எழுத்துக்களில் சில விஷயங்களை நான் உள்ளடக்கியிருக்கிறேன். வரிசை நோக்கத்திற்காக நான் புதிய விஷயத்துடன் அந்த விஷயங்களை எழுத வேண்டிய கட்டாயம்.

 நான் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.

 புத்தகங்களை சுமக்கும் பொதிமாடுகளாக இருந்ததில்லை.

 எந்த வித உணவுப் பொருட்களும் எனக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

 ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எனக்கு வந்ததில்லை.·

 அதிக அளவு இனிப்பு பண்டங்களை சாப்பிட்டு வந்த போதிலும் நான் எடை போடவில்லை.

 நான் வெளியில் விளையாடும் போது ,தாகம் எடுத்தால் தெரு குழாய்களில் தண்ணீர் குடிப்போம். ஆனால் மினரல் வாட்டர் பாட்டில் தேடியதில்லை.

 காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

 எங்களுக்கு வேண்டிய விளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்.

 எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல. ஆனாலும் அவர்கள் "பணம்.. பணம்.." என்று அதன் பின்னால் ஓடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே.

 தாத்தா, பாட்டிக்கு உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை.

 ஆரம்ப ஆண்டுகளில் வீட்டில் சுவர் கடிகாரம் கூட இருக்காது. சிறிய அலாரம் கடிகார மட்டுமே.

 உணவுப் பண்டங்கள் வைத்திருக்க வலை பீரோ தான். சில ஆண்டுகளுக்கு பிறகு தான் ஒரு கட்டத்தில் இரண்டாவது கை fridge குளிர்சாதன பெட்டியை வாங்கினோம்.

 வீடு நிறைய Furniture மரச்சாமான்கள் கிடையாது. நாங்கள் சோபா கம் படுக்கையை மட்டுமே பயன்படுத்தினோம். பெரும்பாலும் தரையில் தான் உட்காருவோம், படுப்போம். நாங்கள் புழங்குவதற்கு நிறைய இடம் இருந்தது.

 எனக்கும் என் அம்மாவுக்கும் இடையே நான் உணவு சாப்பிடும் நேரத்தில் சில நாட்கள் ஒரு சிறு சண்டை வரும். பொதுவாக தினமும் வடாம் அல்லது அப்பளம் இருக்கும். எனக்கு அப்பளம் பொரித்தால் 4 அப்பளம். காச்சினால் 2 அப்பளம். இந்த கூற்று சில நாட்கள் சூடுபிடிக்கும்.ஒரு நாள் அம்மா கோபப்பட்டு தோசை கரண்டியால் என்னை அடித்தார். உடனே அந்த  கரண்டியை  பறித்து உடைத்து விட்டேன். அந்த கரண்டி இன்னும் சமையலறையில் உள்ளது.

 எனது தாத்தா மறைந்த ஸ்ரீ டி.வி.சந்தானம் ஐயங்கார் 1950 ஆம் ஆண்டு எனது தாயாருக்கு ஒரு வீட்டைக் கொடுத்தார்(தற்போது வாழும் இடம்). இப்போது வரை நாங்கள் அதே இடத்தில் தான் வசித்து வருகிறோம். தனி வீட்டை அடுக்குமாடி குடியிருப்பாக மாற்றியது தான் மாற்றம்.

 எனது தாத்தாவின் குடும்பத்தை அவர்களின் ஆதரவிற்காக நாங்கள் தினமும் நினைவில் கொள்கிறோம்.

 அந்த நாட்களில் படுத்தவுடன் தூக்கம் தான். தூக்கம் வர மாத்திரைகள் தேவைப்பட்டதில்லை. பள்ளி நாட்களில் சைக்கிள் தான் ஒரே வாகனம். அவசரமில்லாத நிதானமான வாழ்க்கை.

 நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர். வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

 அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கிவர்கள்1950 மற்றும் அதைச் சுற்றி பிறந்தவர்கள் தான் இருக்க முடியும்.

பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை விளையாட்டு தான்.

 எங்கள் காலங்களில் திறமை மிக்க அரசியல் தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமூகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர்.

 உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை.

 நாங்கள் எடுத்த புகைப்படங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம்.

 அரசாங்கத்திடம் இருந்து இலவசம் பெறும் பிச்சைக்காரர்களாக இருந்ததில்லை.

 அந்த காலங்களில் (1950 மற்றும் அதைச் சுற்றி பிறந்தவர்கள் ) பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்போது நீங்கள் சொல்லுங்கள்....

 இந்த வாழ்க்கைப் பயணத்தை ஒன்றாக, சமமாக போற்றுவோம். பெற்ற வெற்றியை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

 என் வாழ்வில் நான் நினைத்தபடி பல நடந்ததில்லை. இறைவனிடம்  பக்தியுடன் பல வேண்டி கேட்டேன். நான் கேட்டது எதையும் கொடுக்கவில்லை. அதற்காக நான் நாத்திகன் ஆகவில்லை.

 நடந்தது எதுவோ அதன்படி அதன் போக்கில் வாழ்ந்தேன்கிடைத்தது எதுவோ அமைதியாக அதிலே திருப்தியடைந்து மகிழ்ந்தேன்.

 வாழ்க்கையில் யாரிடமிருந்தும்  எதையும் எப்பொழுதும் எதிர் பார்த்ததில்லை. அதனால் ஏமாற்றங்களும் எனக்கு  அதிகமில்லை.

 திறமைக்கு தகுந்த வாய்ப்பில்லை உண்மை தான் .எனது உழைப்புக்கு தகுந்த வாழ்க்கையில் உயர்வில்லை. எதிர்பார்த்தபடி உத்தியோக பூர்வ வாழ்க்கை அமையவில்லை. எதிர்பார்த்த பல விஷயங்கள் நடக்கவில்லை. துன்பமும் துயரமும் தான் சூழ்ந்தன.

ஆனாலும்  ஏமாற்றமில்லை. வாழ்வில் இழந்தவை அதிகம். பெற்றவை குறைவுதான். ஆனாலும் வருத்தம் ஏதுமில்லை.

ஆகா என்றும் வாழவில்லை .ஓகோ என்றும் வளரவில்லை நடந்தது எல்லாம் நல்லதோ கெட்டதோ எதையும் வெளிக்காட்டாமல் ஆரவாரமில்லாமல் ஆர்ப்பாட்டமில்லாமல்  அமைதியாகவே  வாழ்ந்து பழகி விட்டேன்.

என் மகள் சௌ பவித்ரா பிரசித் மெட்ரிகுலேஷனில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், என்னுடைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.எஸ்.சி கணிதத்தில் சேர்த்தேன். படிப்பில் வெற்றி பெற்ற உடன் அவளுக்கு வேலை வாய்ப்பு விப்ரோ பெங்களூரில் வேலை கிடைத்தது.

 வேலையில் சேர்ந்த பிறகு. MCA வகுப்பில் கலந்து கொள்ள ஒவ்வொரு வார இறுதியிலும் சென்னைக்கு வருவார். இன்றும் கூட அவளை BE-ல் சேர்க்காததற்கு நான் வருந்துகிறேன்.

 2000ல் சூளைமேடு எக்ஸ்னோராவின் செயலாளராக நான் பொறுப்பேற்தால், சமூக சேவைக்கான எனது அர்ப்பணிப்பு இன்று வரை தொடர்கிறது, கொரோனா வைரஸின் காலங்களில் நமக்குள் செய்தி அனுப்புதல் மற்றும் நம்மை இணைக்க  வாட்ஸ்அப் நமக்கு உதவியது. நான்கு ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்ட என் அம்மாவைப் கவனித்துக் கொள்வதன் மூலம் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

 ஒரு கோணத்தில் நான் நடுத்தர அளவிலான அதிகாரியாக இருந்தாலும், எனது உத்தியோக வாழ்க்கையில் நான் நன்றாக பணியாற்றியுள்ளேன். நேரடியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மாண்புமிகு உணவு அமைச்சர்களுடன் பணியாற்றியுள்ளேன். அவர்களிடமிருந்து பலமுறை பாராட்டுகளைப் பெற்றுள்ளேன். அதனால் எனக்கு நல்ல செல்வாக்கு கிடைத்தது .

 வாழ்க்கையில் யாருக்காவது  நன்மை செய்தேனோ  இல்லையோ ஆனால் யாருக்கும் நிச்சயமாக தீமை செய்ததில்லை.யாரையும் கெடுத்ததில்லை.

யாரும்  கெட்டு போக வேண்டுமென்று மனதில் நினைத்ததில்லை. வாழ்கவென  வாழ்தியிருக்கிறேன். வீழ்கவென வசை பொழிந்ததில்லை‌.

தினசரி செய்தி தாளில் நீத்தார் செய்தி அறிவிப்பு பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன்.

 சின்னவராக இருந்தால், பரவாயில்லை நாம தப்பிச்சோம் என்றும், பெரியவராக இருந்தால் கழித்துப் பார்த்து, பரவாயில்லை இன்னும் கொஞ்ச நாள் இருக்கு என்றும் எண்ணுவேன்.

பொதுவாகவே, அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன.

நடந்து வந்த பாதை அதிகம் தான் கடந்து வந்த தொலைவும் வெகு தூரம்தான். ஆனாலும்  நான் இது வரையில் களைப்படைய வில்லை. இன்னும் சில தூரம் நடக்க வேண்டியதுள்ளது அதற்காக இன்னும் சில காலம் வாழ வேண்டியதுள்ளது.

ஆனால் இன்று இளமை குறைந்து விட்டது,திறமை மறைந்து விட்டது, முதுமை வந்து விட்டது. என் வாழ்க்கையின் இறுதிக் கோட்டை தொடுகின்ற நிகழ்வு மட்டும் அமைதியாக நடந்து விட்டால் அதுவே நான் இந்த பூமியில் அடக்கமாக  வாழ்ந்ததற்கான  பரிசு.

பொதுவாக கர்மா தான் என் வாழ்க்கையில் விளையாடுகிறது. கெட்ட கர்மாவிற்கா நான் வாழ்க்கையில் துன்பத்தை அனுபவிக்கிறேன், நல்ல கர்மாவை சம்பாதிக்க நான் நல்லதை செய்கிறேன். நான் கர்மா கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவன்.

நான் ஆண்டவனிடம் எதையும் வேண்டுவதில்லை. அதனால் என்னை பெற்றவர்களைஎன் வாழ்க்கையில்  உதவிய பெரியவர்களைஎனது வளர்ச்சிக்கு உதவிய எனது அன்பு  நண்பர்களை அன்றாடம்  நினைத்து பார்க்கிறேன்அவர்களை  தினமும்  இரு  கரம் கூப்பி வணங்கி மகிழ்கிறேன்.

வாழும் காலம் வரை நன்றாக  வாழ்வோம். அதுவரை  எல்லோரையும் வாழ்க வாழ்கவென மனதார வாழ்த்துவோம் வாய்ப்பிருந்தால் சந்திப்போம் பேசுவோம்

 வணக்கம்.